• www.maravanpulo2.blogspot.com

  • விடுகதை கேள்விகள் பகுதி ( 01 )

  • 1. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன?

    மிருதங்கம்
  • 02. அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன?

    சாம்பிராணி
  • 03. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன?

    வளையல்
  • 04. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?

    மதி
  • 05. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன?

    பாம்பு
  • 06. ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் , ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன?

    தேன் கூடு
  • 07. எட்டாத ராணியாம் இரவில் வருவாள், பகலில் மறைவாள். அது யார்?

    நிலா
  • 08. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?

    சூரியன்
  • 09. அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?

    காற்று
  • 10. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன?

    மரம்
  • 11. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன?

    குடை
  • 12. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன?

    மூச்சு
  • 13. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?

    பம்பரம்
  • 14. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன?

    வானம்
  • 15. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. அது என்ன?

    தண்ணீர்
  • 16. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன?

    குளிர்
  • 17. உணவு கொடுத்தால் வளரும்; நீர் கொடுத்தால் அழியும். அது என்ன?

    நெருப்பு
  • 18. ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான். அது என்ன?

    தீக்குச்சி
  • 19. தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். அது என்ன?

    உரோமம்
  • 20. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?

    கடிகாரம்
  • பகுதி ( 02 )

  • 01. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?

    நாய்
  • 02. உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?

    இளநீர்
  • 03. தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?

    அன்னாசிப்பழம்
  • 04. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?

    நண்டு
  • 05. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?

    பட்டாசு
  • 06. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?

    நுளம்பு
  • 07. கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?

    சோளப்பொத்தி
  • 08. மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன?

    அன்னாசிப்பழம்
  • 09. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?

    தேங்காய்
  • 10. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன?

    நத்தை
  • 11. ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?

    கண்ணீர்
  • 12. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?

    மெழுகுதிரி
  • 13. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்?

    நுங்கு
  • 14. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?

    அகப்பை
  • 15. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?

    முட்டை
  • 16. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?

    கடிதம்
  • 17. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?

    கல்வி
  • 18. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?

    முருங்கைமரம்
  • 19. தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்?

    உப்பு
  • 20. குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்?

    கத்தரிக்காய்
  • பகுதி ( 03 )

  • 01.கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்?

    புகை
  • 02. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன?

    வியர்வை
  • 03. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன?

    உப்பு
  • 04. கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை. அது என்ன?

    சட்டை
  • 05. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவை யாவை?

    எறும்புகள்
  • 06. ஆகாயத்தில் பறக்கும். அக்கம் பக்கம் போகாது. அது என்ன?

    கொடி
  • 07. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர். அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி. அது என்ன?

    துத்தநாகம்
  • 08. அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு. அது என்ன?

    முட்டை
  • 09. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன?

    மழை
  • 10. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன?

    பெட்ரோல்
  • 11. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்?

    இள‌நீ‌ர்
  • 12. ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன?

    எறு‌ம்பு
  • 13. வினா இல்லாத ஒரு விடை அது என்ன விடை?

    ப‌ணி‌விடை
  • 14. உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?

    தீ‌க்கு‌ச்‌சி
  • 15. கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?

    கா‌லி‌ங்பெ‌ல்
  • 16. தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?

    க‌ண் இமை
  • 17. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?

    அமைதி
  • 18. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?

    தென்றல்
  • 19. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

    பட்டாசு
  • 20. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?

    எறும்புக் கூட்டம்
  • பகுதி ( 04 )

  • 01. முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?

    முத்திரை
  • 02. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?

    நெருப்பு
  • 03. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன?

    சவப்பெட்டி
  • 04. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன?

    தற்கொலை
  • 05. 3. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது அது என்ன?

    குயில்
  • 06. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?

    சோளம்
  • 07. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?

    பஞ்சு
  • 08. சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன?

    மின்விசிறி
  • 09. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?

    தொலைபேசி
  • 10. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?

    நெருப்பு
  • 11. கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன?

    சேவல்
  • 12. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?

    சோளக்கதிர்
  • 13. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?

    உப்பு
  • 14. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன?

    உளுந்து
  • 15. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன?

    ஈ
  • 16. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?

    ஈசல்
  • 17. . உருவத்தில் சிறியவன். உழைப்பில் பெரியவன். அவன் யார்?

    எறும்பு
  • 18. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?

    மெழுகுவர்த்தி
  • 19. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?

    வாழை
  • 20. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன?

    இடியாப்பம்
  • பகுதி ( 05 )

  • 01. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?

    தீபம்
  • 02. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?

    நிலா
  • 03. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?

    மஞ்சள்
  • 04. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?

    இதயம்
  • 05. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?

    தக்காளி
  • 06. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?

    கடல்
  • 07. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?

    கண்
  • 08. மழை காலத்தில் பிடிப்பான் அவன் யார்?

    காளான்
  • 09. காய்க்கும் பூக்கும் கலகலக்கும் காகம் இருக்கக் கொப்பில்லை அது என்ன?

    நெல்லு
  • 10. கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன?

    வேம்பு
  • 11. ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?

    காட்ஸ்
  • 12. கடலில் கலக்காத நீர், யாரும் குடிக்காத நீர் – அது என்ன?

    கண்ணீர்
  • 13. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?

    வாய்
  • 14. விடுமுறை இல்லாத கடை எது?

    சாக்கடை
  • 15. சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் – அது என்ன?

    தீக்குச்சி
  • 16. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார் அவர் யார்?

    பாம்பு
  • 17. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன?

    கண் இமை
  • 18. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?

    ஆறு அல்லது அருவி
  • 19. அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?

    வெங்காயம்
  • 20. வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?

    நெருப்பு
  • பகுதி ( 06 )

  • 01. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன ?

    முதுகு
  • 02. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?

    சிலந்தி வலை
  • 03. முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார் ?

    மின்சாரம்
  • 04. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன ?

    சிலந்தி வலை
  • 05. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார் ?

    மணிக்கூடு
  • 06. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன ?

    தேன்
  • 07. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன ?

    ஊசி
  • 08. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன ?

    மத்து
  • 09. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார் ?

    துவாரம்
  • 10. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார் ?

    காற்று
  • 11. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார் ?

    வானொலிப் பெட்டி
  • 12. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார் ?

    தலையணை
  • 13. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார் ?

    மெட்டி
  • 14. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன ?

    தேனீ
  • 15. அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன ?

    வாழைப்பூ
  • 16. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?

    தலை வகிடு
  • 17. அத்தையில்லா அத்தை என்ன அத்தை ?

    சித்தரத்தை
  • 18. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான் ?

    மொடக்கத்தான்
  • 19. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் – அது என்ன?

    இளநீர்
  • 20. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்ன?

    புடலங்காய்
  • பகுதி ( 07 )

  • 01. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?

    நிழல் அல்லது விம்பம்
  • 02. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?

    சீப்பு
  • 03. வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை அது என்ன?

    முட்டை
  • 04. ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?

    உள்ளங்கையும் விரல்களும்
  • 05. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?

    வாழைப்பழம்
  • 06. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?

    செத்தல் மிளகாய்
  • 07. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது. அது என்ன?

    சங்கு
  • 08. தட்டச் சீறும் அது என்ன?

    தீக்குச்சி
  • 09. நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?

    தையல் ஊசியும் நூலும்
  • 10. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?

    நிழல்
  • 11. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?

    நத்தை
  • 12. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?

    வழுக்கை
  • 13. தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?

    பென்சில்
  • 14. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்?

    பலூன்
  • 15. பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?

    கிளி
  • 16. அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?

    அம்மி குளவி
  • 17. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?

    பூசனிக்கொடி
  • 18. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?

    கரும்பு
  • 19. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

    தலைமுடி
  • 20. வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன?

    விளக்கு
  • பகுதி ( 08 )

  • 01. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்?

    புல்லாங்குழல்
  • 02. ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன?

    ரத்தம்
  • 03. தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன?

    உப்பு
  • 04. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?

    கத்தரிக்கோல்
  • 05. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?

    துடைப்பம் (தும்புத்தடி)
  • 06. ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?

    ஊதுபத்தி
  • 07. மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?

    பஞ்சு
  • 08. தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன?

    எழுமிச்சம்பழம் (தேசிக்காய்)
  • 09. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?

    விக்கல்
  • 10. காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியில் காணும் பட்சி, குப்பையைக் கிளறும் பட்சி, கொண்டையுடைய பட்சி – அது என்ன?

    சேவல்
  • 11. சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும் – அது என்ன?

    கொசு
  • 12. சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்ன?

    வாழைப்பழம்
  • 13. சங்கரன் கோவில் டப்பா தாயும் மகளும் தேய்ப்பா – அவை என்ன?

    அம்மி குழவி
  • 14. கோட்டையயைச் சுற்றி மதில் சுவர் உள்ளே மறைந்திருக்கிறான் வேட்டைக்காரன் – அது என்ன?

    நாக்கு
  • 15. கோடையிலே ஆடி வரும் வாடையில முடங்கி விடும் – அது என்ன?

    மின்விசிறி
  • 16. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன?

    கரும்பு
  • 17. கோவில் குளம் இல்லாமல் கொட்டி திரிகிறான் ஒருவன் – அவன் யார்?

    குயவர்
  • 18. கோவிலைச் சுற்றி கறுப்பு கோவிலுக்குள்ளே வெளுப்பு – அது என்ன?

    சோற்றுப்பானை
  • 19. கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி – அது என்ன?

    தேங்காய்
  • 20. கோழிக் குஞ்சு பொரிப்பது எப்படி? தாழி நெய்யை எடுப்பது எப்படி?

    முட்டையிட்டு
  • பகுதி ( 09 )

  • 01. காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்?

    கொக்கு
  • 02. காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன?

    தவளை
  • 03. காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன?

    முட்டை
  • 04. காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்?

    பாம்பு
  • 05. காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன?

    முள்
  • 06. காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன?

    சேவல்
  • 07. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன?

    வானம்
  • 08. கையுண்டு, கழுத்துண்டு, தலையுண்டு உயிரில்லை அது என்ன?

    சட்டை
  • 09. வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன?

    மயில்
  • 10. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?

    கிளி
  • 11. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன?

    கப்பல்கள்
  • 12. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?

    ஒட்டகம்
  • 13. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?

    தொட்டா சுருங்கிச் செடி
  • 14. வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன?

    விமானம்
  • 15. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?

    பப்பாளி விதைகள்
  • 16. நடக்கத் தெரியாதவன், நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?

    கைகாட்டி
  • 17. நடலாம், பிடுங்க முடியாது அது என்ன?

    பச்சை குத்துதல்
  • 18. நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?

    வெங்காயம்
  • 19. நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்?

    அன்னம்
  • 20. நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன?

    அச்சு வெல்லம்
  • Should be Empty: